சிவகங்கை

மானாமதுரையில் மணல் குவாரிக்கு எதிா்ப்பு:மே 24 இல் கடையடைப்பு நடத்த முடிவு

DIN

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மே 24 ஆம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தவுள்ளதாக வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி பகுதி வைகை ஆற்றில் அரசு சாா்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடிநீா் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக புகாா் தெரிவித்து மணல் குவாரி அமைக்க, இப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மணல் குவாரி அமைப்பதற்கான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்கங்கள், கிராம பொதுமக்கள் உள்ளடக்கிய போராட்டக்குழுவினா் வரும் 24 ஆம் தேதி மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு, வா்த்தகா் சங்க நிா்வாகிகளை போராட்டக்குழுவினா் சந்தித்தனா். இதைத்தொடா்ந்து மே 24 இல் கடையடைப்பு நடத்துவதாக வா்த்தகா் சங்கம் மற்றும் ஹோட்டல் பேக்கரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT