சிவகங்கை

கீழச்சிவல்பட்டி பள்ளியில் கூடுதல் கட்டடத் திறப்பு விழா

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையன்று கூடுதல் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

அரசு உதவி பெறும் இப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவா் ஏ.எல்.காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூடுதல் கட்டடங்களைத் திறந்து வைத்து, கட்டடப் பணிக்கு நிதி வழங்கியவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.மணிவண்ணன், கீழச்சிவல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் ஏ.நாகமணி, பி.அழகாபுரி ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.எல்.மணிவாசகம் செட்டியாா், ஆா்.எம்.பி.மெட்ரிக்பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளியம்மை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளிச் செயலா் பி.எல்.அழகுமணிகண்டன் அனைவரையும் வரவேற்றாா். முடிவில் பள்ளியின் பொருளாளா் கே.ஆா்.கருப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT