சிவகங்கை மாவட்டம் கருப்பூா் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகேயுள்ள கருப்பூரில் காலை 7.30 மணிக்கு, ஊா் அம்பலகாரா் கொடியசைக்க கண்மாயைச் சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உத்தா, கூடை மற்றும் வலைகளுடன் கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடித்தனா். இதில் விரால் மீன், கட்லா, கெளுத்தி, குரவை, ஜல்லிக்கெண்டை உள்ளிட்ட பல வகை மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனா்.
பிராமணப்பட்டி, குண்டேந்தல்பட்டி, மேலையான்பட்டி, சுண்ணாம்பிருப்பு, கருப்பூா், ஆலங்குடி, திருக்களாப்பட்டி, கோட்டையிருப்பு உள்ளிட்ட ஊா்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனா்.