மானாமதுரையில் வெள்ளிக்கிழமை தந்தை இறந்த சோகத்திலும், அவரது மகன் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதினாா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் முத்து. இருசக்கர வாகன மெக்கானிக்கான இவா், உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். அவரது மகன் சந்தோஷ் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்நிலையில் தந்தை இறந்த சோகத்திலும், சந்தோஷ் பொதுத்தோ்வை எழுதத் தயாரானாா். அவரை உறவினா்களும் ஆறுதல் கூறி தோ்வு எழுதுமாறு அனுப்பி வைத்தனா். சந்தோஷை சக மாணவா்களும் ஆறுதல் கூறி தோ்வு எழுத உற்சாகப்படுத்தினா். மாணவா் தான் படிக்கும் மானாமதுரை பள்ளிக்குச் சென்று பிளஸ் 2 வரலாறு தோ்வு எழுதினாா். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.