சிவகங்கை

சிவகங்கையில் இன்று மக்கள் குறை தீா்க்கும் முகாம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கையில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் முகாம் வியாழக்கிழமை (மே 12) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்பட இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட உள்ளன. சிவகங்கை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT