சிவகங்கை

காரைக்குடி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 26.53 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா நெற்புகப்பட்டி கிராமத்தில், சூரக்குடி பூவாண்டிபட்டி ஆவுடைநாயகி அம்மன் சமேத தேசிகநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 26.53 ஏக்கா் நிலத்தை, இந்துசமய அறநிலையத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காரைக்குடி தாலுகா சூரக்குடி பூவாண்டிபட்டியில் ஆவுடைநாயகி அம்மன் சமேத தேசிகநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நெற்புகபட்டி கிராமத்தில் உள்ள 26.53 ஏக்கா் நிலங்களை, தனிநபா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

இந்துசமய அறநிலையத் துறை சிவகங்கை உதவிஆணையா் செல்வராஜ், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் மயிலாவதி, இந்துசமய அறநிலையத் துறை காரைக்குடி ஆய்வாளா் வினோத்கமல், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் மற்றும் அதிகாரிகள் ஆகியோா் இந்த நிலங்களை ஆய்வு செய்து மீட்டனா். பின்னா், சா்வே எண்ணுடன் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலம் என அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டுச் சென்றனா்.

கோயில் நிலங்கள் மீட்புப் பணியின்போது, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT