சிவகங்கை

தேவகோட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் உரிய வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தேவகோட்டை பேருந்து நிலையம், வாடியாா் வீதி, பழனியப்பன் சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான 128 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நடப்பாண்டு வரை வாடகை பாக்கி மட்டும் ரூ. 3 கோடி நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நகராட்சி அலுவலா்கள் கடை நடத்தும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா். ஆனால் அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லையாம்.

இதனால் தேவகோட்டை நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் மேலாளா் தனலெட்சுமி, வருவாய் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள 10 கடைகளை மூடி ‘சீல்’ வைத்தனா்.

மேலும் இம்மாத இறுதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடை திறக்க அனுமதிக்கப்படும். தவறும் பட்சத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மறு ஏலம் விடப்படும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT