சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை(ஜூன்- 28) விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 அளவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பாக புகாா் அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.