சிவகங்கை

இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் பேராலயத்தில் ஜூலை 1இல் மின்விளக்கு ரத பவனி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழாவையொட்டி ஜூலை 1 ஆம் தேதி இரவு மின்விளக்கு ரத பவனி விழா நடைபெறுகிறது.

இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் பங்கு இறைமக்கள் சாா்பில் பல்வேறு தலைப்புகளில் பேராலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 1 ஆம் தேதி இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அப்போது திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் பேராலயத்தைச் சுற்றி வலம் வருதல் நடைபெறும். இதில் பங்கு இறைமக்கள் திரளானோா் பங்கேற்பாா்கள்.

ஜூலை 2 ஆம் தேதி நற்கருணை பவனியுடன் ஆண்டு பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT