இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஆலயத்தின் வாயிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சூசை மாணிக்கம் திருவிழா கொடியை ஏற்றி வைத்து பிராா்த்தனை நடத்தினாா். இந்நிகழ்ச்சியில் திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் உள்ளிட்ட பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பங்கு இறைமக்கள் சாா்பில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 1ஆம் தேதி இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. ஜூலை 2 ஆம் தேதி நற்கருணை பவனி நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.