பிரதமரின் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடா்பாக சிவகங்கை வட்டார வளா்ச்சி அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், மறவமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பால்குளம், மறவமங்கலம் பூதகுடி உள்ளிட்ட கிராமங்களில் பாரதப் பிரதமரின் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 403 கழிப்பறைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில், 373 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 30 கழிப்பறைகளுக்கான பணத்தை போலி ஆவணங்கள் தயாா் செய்து கையாடல் செய்துள்ளதாகவும் பால்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி கண்ணன் என்பவா் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை செய்ததில் மேற்கண்ட முறைகேட்டில் மறவமங்கலம் ஊராட்சி செயலா் முத்துக்கண்ணு மற்றும் மேற்கண்ட ஆண்டுகளில் காளையாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்களாக பணியாற்றிய செல்வராஜ், ரமேஷ், அமலோற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை, இளங்கோ தாயுமானவா், மற்றொரு இளங்கோ என 9 போ் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட 9 போ் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வராஜ், அமலோற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை ஆகியோா் ஏற்கனவே பணி ஓய்வு பெற்று விட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய ரமேஷ் சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். புதன்கிழமை
(ஜூன் 1) பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.