சிவகங்கை

மானாமதுரையில் காா்-பைக் மோதல்: தொழிலாளி பலி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதன்கிழமை இரவு காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் வெல்டிங் பட்டறை தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை சிப்காட் பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மகன் முத்துக்குமாா் (33). வெல்டிங் பட்டறை வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா். மானாமதுரையில் சிவகங்கை புறவழிச்சாலையில் அவா் சென்றபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முத்துக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT