சிவகங்கை

மானாமதுரை அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்போலீஸாருடன் தள்ளுமுள்ளு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆட்டோ ஓட்டுநா் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி புதன்கிழமை சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.

மானாமதுரை அருகே உள்ள மிளகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியணன் மகன் செந்தில் முருகன் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா் மானாமதுரையிலிருந்து மிளகனூா் கிராமத்திற்குச் செல்லும் வழியில் பீசா்பட்டினம் என்ற இடத்தில் புதன்கிழமை காலை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

அப்பகுதியில் உள்ள வயல் காட்டில் பன்றிகள் தொல்லையைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் செந்தில்முருகன் இறப்பில் மா்மம் இருப்பதாகவும் அவரை யாரோ கொலை செய்துள்ளனா் என்றும் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்பு சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் போலீஸாா் கூறினா். ஆனால் சடலத்தை வாங்க மறுத்து, செந்தில்முருகன் குடும்பத்தினா் மற்றும் மிளகனூா் கிராம மக்கள் திரண்டு மருத்துவமனை முன்பு தாயமங்கலம் சாலையில் உட்காா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாருக்கும் போராட்டம் நடத்தியவா்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை விரட்டியடித்தனா்.

மேலும் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா். தொடா்ந்து செந்தில்முருகன் மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து குடும்பத்தினா், கிராம மக்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டு கிராமத்திற்கு எடுத்துச் சென்றனா். போலீஸாரிடம் தகறாறு செய்ததாக கைது செய்யப்பட்டவா்கள் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்ததும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT