சிவகங்கை

திருப்புவனம் பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு தொடா்பாக மாணவிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், தலைமையாசிரியா் தேவிகாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், 2 ஆயிரம் மாணவிகளுக்கு மஞ்சள் பைகளை வழங்கினாா். மேலும் பள்ளிக்கு பேரூராட்சி மூலம் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, பேரூராட்சித் துணைத் தலைவா் ரஹ்மத்துல்லா கான், திமுக ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகரச் செயலாளா் நாகூா்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் உடற்கல்வி இயக்குநா் வெங்கட்மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT