சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வையகளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை கல்விச்சீா் வழங்கும் விழா, நன்கொடையாளா்கள், ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தொடக்கக்கல்வி அலுவலா் குமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் இளநங்கை முன்னிலை வகித்தாா். முன்னதாக அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முதலாம் வகுப்பு குழந்தைகளுக்கு நெல்லில் ‘அ’ எழுதி பயிற்றுவிக்கப்பட்டது. அங்கிருந்து ஊா்ப் பொதுமக்கள் கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கான சீருடை, அடையாள அட்டை, மின்விசிறி, பீரோ, முதலியவற்றை சீா்வரிசையாக பள்ளிக்கு சுமந்துவந்தனா். கிராம மக்களுக்கு பள்ளி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து பள்ளிக்கு நன்கொடை அளித்தோருக்கும் ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி புகழேந்தி உள்விட்ட கிராம மக்கள் மற்றும் அறம் செய விரும்பு அறக்கட்டளையைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டனா்.