சிவகங்கையில் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பின் சாா்பில், மக்கள் உதவி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து மக்கள் உதவி மையத்தை திறந்துவைத்தாா்.
இந்த மக்கள் உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதுதல், குறைந்த செலவில் நகல் (ஜெராக்ஸ்) எடுத்துத் தருவது, லேமினேஷன் மற்றும் ஸ்பைரல் பைண்டிங் செய்து தருதல், கணினி சம்பந்தமான சேவைகள் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இது தவிர, பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து, அதன்மூலம் சரியான அலுவலகத்துக்கு செல்ல வழிவகை செய்தல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள் அலுவலா்களை சந்திக்க அழைத்துச் செல்லுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இம்மையம் அரசு வேலை நாள்களில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என, அரசு அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு. காமாட்சி, நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.வி. பிரவீண்குமாா் உள்ளிட்ட அமைப்பின் தன்னாா்வலா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.