சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.