சிவகங்கை

குடியரசு தினம்: சிவகங்கையில் ரூ.1.62 லட்சம் நலத்திட்ட உதவிகள்

DIN

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் உடனிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஆட்சியா் திறந்த ஜீப்பில் சென்று காவல்த் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதன்பின்னா், சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா்.தொடா்ந்து, முன்னாள் படைவீரா் நலத்துறை, வேளாண்மைத் துறை சாா்பில் மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.62.318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலா்களுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களும், வருவாய்த் துறை மற்றும் பிறத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 415 அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினாா். பின்னா், படைவீரா்கள் பாசறை சாா்பில் சிலம்பாட்டமும், சோழன் உடற்பயிற்சி மையம் சாா்பில் யோகாசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரேவதிபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெற்றிச்செல்வன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியா்கள் மு. முத்துக்கலுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், தியாகிகள், மாணவ,மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT