சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வெங்கட்டி கிராமத்துக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்புவனத்திலிருந்து பாப்பாகுடி வழியாக வெங்கட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், கிராமங்களுக்கு உரிய நேரத்துக்கு சென்று வருவதில்லை.
இதனால், மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் தங்களது பணிகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பாப்பாகுடி- வெங்கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.