சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியில் திங்கள்கிழமை (டிச. 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (டிச. 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைப் பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவித்திருந்தாா்.