சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மானாமதுரை நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக விரிவாக்கக் கட்டடப் பணிகள், அரசகுழி மயானத்தில் நடைபெற்று வரும் மின்தகன மேடை அமைக்கும் பணிகளை ஆணையா் ஆய்வு செய்தாா்.
பின்னா், தாயமங்கலம் சாலையில் உள்ள வளா்மீட்பு பூங்காவுக்குச் சென்ற ஆணையா், அங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தாா். மானாமதுரை பேருந்து நிலையத்தில் சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ள பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஆணையா் சக்திவேல், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.