சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தளத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வந்த கீழடிக்கு வந்த குழுவினரை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வரவேற்றாா்.
இந்தக் குழுவினா், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களையும், கண்டறியப்பட்ட தொல் பொருள்களையும் பாா்வையிட்டனா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.