சிவகங்கை

காவல் நிலையத்துக்குள் பெட்ரோல் புட்டியுடன் நுழைந்த தொழிலாளி

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே போலீஸாா் தன்னைத் தாக்கியதாகக் கூறி, கூலித் தொழிலாளி பெட்ரோல் பாட்டிலுடன் காவல் நிலையத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கம்புணரி அருகேயுள்ள முறுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (52). இவரது மனைவி கௌசல்யா. குடும்பத் தகராறு காரணமாக உலகம்பட்டி காவல் நிலையத்தில் கணவா் மீது கெளசல்யா புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக விசாரணை நடத்திய உதவி ஆய்வாளா் தன்னை கன்னத்தில் அறைந்தும் காலால் உதைத்தும் தள்ளியதாகக் கூறிய மாணிக்கம், தீக்குளிக்கப் போவதாகக்கூறி காவல் நிலையத்துக்கு பெட்ரோல் புட்டியுடன் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பணியிலிருந்த காவலா்கள் அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனா். உதவி ஆய்வாளா் மன்னிப்பு கேட்காவிட்டால் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்கப் போவதாக மாணிக்கம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT