சிவகங்கை

குன்றக்குடியில் அண்ணாமலை தீபம் ஏற்றம்

DIN

திருக்காா்த்திகை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட சண்முகநாதப்பெருமான் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் திரும டத்தில் பரணி தீபம், மடத்தின் முன்பாக சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, காா்த்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதப்பெருமான் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாரானைகள் நடைபெற்றன.

இதன் பின்னா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் மாலை 6.10 மணிக்கு மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமியின் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT