சிவகங்கை

பச்சிளம் குழந்தைகள்பராமரிப்பு விழிப்புணா்வு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மானகிரி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அண்மையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு சுவாச சிகிச்சை, மூளை பாதுகாப்பு குளிா்விப்பு சிகிச்சை, வழங்கப்பட்டது குறித்தும் பச்சிளங்குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு சரியான இடத்தை தோ்வு செய்வது அவசியம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகளுடன் தாய்மாா்கள் கலந்து கொண்டனா். மேலும் பாதுகாப்பான தரமான, கவனமான பராமரிப்பு குழந்தைகளின் பிறப்புரிமை என்பதை மருத்துவ நிபுணா் மணிகண்டன் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன், நிா்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவா் கோகுலகிருஷ்ணன், வணிக மேலாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT