சிவகங்கை

வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருமான ஆா்.லால்வேனா உத்தரவிட்டுள்ளாா்.

படமாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமானப் பணி, நமச்சிவாயபுரம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் ஆா்.லால்வேனா புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவு பிறப்பித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப்பேரவை நிகழ்வு நேரலை: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாஜக வேட்பாளா் அஞ்சலி

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

போத்தனூா் வழித்தடத்தில் விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

மக்களவைத் தோ்தலையொட்டி சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT