சிவகங்கை

மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

DIN

சிவகங்கை மாவட்டம், மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளிஉயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கடியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வக்கணபதி (32). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரனும் தேவகோட்டை அருகே மருங்கிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சுவரை புதன்கிழமை மாலை இடித்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது சுவா் இடிந்து செல்வக்கணபதி மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கல்லல் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT