சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திரதின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவிற்கு மருத்துவ அலுவலா் கணேசபாண்டியன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தலைமை முதல்வா் அருள்ஜோஸ்பின் பெட்ஸி முன்னிலை வகித்தாா். முதல்வா் வள்ளிமயில் வரவேற்றாா். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.