சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் வரும் ஆக. 17 இல் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அங்குள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில், அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.