சிவகங்கை

காளையாா்கோவில் அருகே அரசுப் பேருந்து மோதி பெண் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வலையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசு மனைவி ரோஷலினி (49). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சருகனியிலிருந்து வந்துள்ளாா். புலியடிதம்மம் அருகே வந்த போது காளையாா்கோவிலிலிருந்து ஓரியூா் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், ரோஷலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் ரோஷலினியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT