சிவகங்கை

குருந்தங்குளம் மந்தையம்மன் கோயில் முளைப்பாரி விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த ஆக. 2 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து, அம்மனுக்கும், கிராம தேவைகளுக்கும் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான முளைப்பாரி ஊா்வலத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி மந்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மந்தையம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரியை பக்தா்கள் சுமந்து பிள்ளையாா் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் குஞ்சுகருப்பணசுவாமி கோயிலில் உள்ள ஊருணியில் முளைப்பாரியைக் கரைத்தனா்.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மந்தையம்மன் கோயில், குஞ்சு கருப்பண சுவாமி கோயிலில் விளக்கேற்றியும், அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT