சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வேல் கம்புடன் சுற்றிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.
ஒக்கூா் தென்றல் நகரைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் அருண்குமாா்(25). இவா் அதே பகுதியில் வேல் கம்பை வைத்துக் கொண்டு திங்கள்கிழமை பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரை திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.