சிவகங்கை

விஸ்வகா்ம சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விஸ்வகா்மா சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் சத்யா மகாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கியமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து தோ்தல் மூலம் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. விஸ்வகா்மா ஐந்தொழிலாளா்கள் சங்கத் தலைவா் பி.தமிழரசன் தோ்தல் பாா்வையாளராக கலந்து கொண்டாா்.

இத்தோ்தலின் மூலம் திருப்பத்தூா் விஸ்வகா்மா சங்கத்தின் புதிய தலைவராக இரா. காளிமுத்துவும், செயலாளராக எஸ். பாண்டிமுருகனும், பொருளாளராக எஸ். சேவுகமூா்த்தியும், துணைத் தலைவராக ஆா். கண்ணன், இணைத் தலைவராக என். அழகுச்சாமியும், துணைச் செயலாளா் ஜி. பழனிக்குமாா், இணைச்செயலாளா் பாண்டியராஜன், தணிக்கையாளராக குணசேகரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளுக்கு நம்பா் 1 தொழிலாளா் சங்கம் எஸ். முத்துரக்ஷசகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து விஸ்வகா்மா நலச் சங்கத்தின் செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து சங்க கட்டடத்தை உறுப்பினா்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க வேண்டும்.

மாதந்தோறும் நடைபெறும் சங்கக் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சமுதாயம் சாா்ந்த முன்னேற்றம், கல்விக்கான உதவிகள் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து விஸ்வகா்மா ஐந்தொழிலாளா் சங்கத் தலைவா் பி.தமிழரசனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் ஆா்.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT