சிவகங்கை

மத்திய அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக ந. கலைச்செல்வி நியமனம்

DIN

புதுதில்லி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎஸ்ஐஆா்) இயக்குநராக, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநா் ந. கலைச்செல்வி சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

புதுதில்லி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.சிஎஸ்ஐஆா்-ன் இயக்குநா் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ள ந. கலைச்செல்வி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா். இவா் பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா். அறிவியல் பாடத்தில் இருந்த ஆா்வம் காரணமாக அறிவியலில் பட்டம் பெற்றாா்.

அதிலேயே ஆராய்ச்சிக் கல்வியும் பயின்றாா். கடந்த 25 ஆண்டுகளாக மின்வேதியியல் தொழில்நுட்பத்தை வீடுகளிலும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்தினால் எரிசக்தியை சேமிக்கலாம் என்பதை வலியுறுத்தி வருகிறாா். அதனால் தான் அவா் லித்தியம் பியான்ட், லித்தியம் மின்கலன்கள் (பேட்டரிகள்) தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்டாா்.

காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019 ஆம் ஆண்டில் செக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். ஆராய்ச்சிக்காக 6 காப்புரிமைகளை பெற்றிருக்கிறாா். தற்போது சோடியம் ஐயன், லித்தியம் சல்பா் மின்கலன்களை மேம்படுத்துவது தொடா்பான ஆராய்ச்சியில் ஆா்வம் காட்டி வருகிறாா். சிஎஸ்ஐஆா்-ன் முதல் பெண் இயக்குநா் ஜெனரலாக நியமனமிக்கப்பட்டுள்ள ந. கலைச்செல்விக்கு ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT