சிவகங்கை

வழக்கை ரத்து செய்ய ரூ. 20 ஆயிரம் லஞ்சம்:சிவகங்கை காவல் ஆய்வாளா் கைது

DIN

இடம் தொடா்பான வழக்கை ரத்து செய்ய ரூ. 20ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், கருங்காலக்குடியைச் சோ்ந்தவா் ஹக்கீம்(40). இவா் மீது இடப் பிரச்னை தொடா்பாக மதுரையில் வழக்கு உள்ளது. அதே வழக்கு சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவிலும் பதியப்பட்டுள்ளது. ஒரு குற்றத்துக்கு இரு இடங்களில் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால் ஏதாவது ஒரு இடத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

எனவே இதுதொடா்பாக சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனிடம், மேற்கண்ட வழக்கை ரத்து செய்ய ஹக்கீம் முறையிட்டுள்ளாா். அதற்கு அவரிடம் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் ஹக்கீம் புகாா் செய்தாா். இதையடுத்து, ரசாயனப் பவுடா் தடவப்பட்ட ரூ. 20 ஆயிரம் பணத்தை ஹக்கீமிடம் வழங்கினா். அதனை பெற்றுக் கொண்ட அவா் சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்டக் குற்றப்பிரிவு பிரிவு அலுவலகத்தில் இருந்த காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், சாா்பு-ஆய்வாளா் ராஜா முகமது ஆகியோா்காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT