சிவகங்கை

நெற்குப்பை அருகே சாலை விபத்தில் ஒருவா் பலி

DIN

நெற்குப்பை அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஒழுகமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (45). இவா் தனது மனைவி மணிமேகலையுடன் (40) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டி பகுதியில் இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே சக்திவேல் என்பவா் ஓட்டிவந்த காா் மோதியது. இதில் தம்பதியா் பலத்த காயமடைந்து பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நெற்குப்பை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT