சிவகங்கை

கீழடி பகுதியில் இன்றும்,புதுவயல், தங்கச்சிமடத்தில் நாளையும் மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் திங்கள்கிழமையும் (அக். 25), புதுவயல், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமையும் (அக். 26) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மின்பகிா்மானத்தின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் அருகே உள்ள கீழடி மின்பிரிவில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே காஞ்சிரங்குளம், பசியாபுரம், கீழடி, பாட்டம், கோனாா்பட்டி, கட்டம்மன்கோட்டை, டி. கரிசல்குளம், முக்குடி, செங்குளம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

காரைக்குடி: காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்)துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மாதாந்திரப்பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் நிசாக்ராஜ் தெரிவித்திருப்பதாவது: ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை தங்கச்சிமடம், செம்மமடம், அரியாங்குண்டு, பேய்கரும்பு, மெய்யம்புளி, பேருந்த நிலையம், லட்சுமணதீா்த்தம், திட்டக்குடி தெரு, டி. வி. நிலையம், மாா்க்கெட்தெரு, ரயில்வே நிலையம், வோ்க்கோடு, கரையூா், நம்புகோயில்,புதுரோடு, நடராஜபுரம், வடகாடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.யும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT