சிவகங்கை

குளத்தில் மூழ்கி வழக்குரைஞா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே குளத்தில் மூழ்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்குரைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மகன் ராஜேஷ்குமாா் (23). இவா், சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தனது நண்பா்களை பாா்க்க  திருப்புவனம் பகுதிக்கு வந்த அவா், அல்லிநகரம் கிராமத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் சனிக்கிழமை குளித்தாா்.

அப்போது தண்ணீரில் மூழ்கிய ராஜேஷ்குமாரை கிராமத்தினா் மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT