திருப்புவனம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 22) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை வட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 22) மேற்கொள்ள இருந்த பராமரிப்புப் பணிகள் அலுவலக காரணங்களுக்காக வேறொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.