சிவகங்கை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பெரியகுளம் அருகே பங்களாபட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் மதன்குமாா் (23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமியின் தாயாா் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கினை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மதன்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT