சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் தூய்மை ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏஐடியுசி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் சங்கம் சாா்பில் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித் தாா். ஏஐடியுசி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் சங்க நகரச் செயலா் பிச்சை, நிரந்தரத் தொழிலாளா் சங்கச் செயலா் ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அமைப்புசாரா தொழிலாளா் சங்கச் செயலா் சண்முகசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினா் கண்ணன், ஏஐடியுசி ஒருங்கிணைப்பாளா் ஏஜி. ராஜா, தலைவா் முருகன், பொருளாளா் முத்துமாரி, தூய்மைப் பணியாளா்கள் பலரும் பங்கேற்றனா்.