காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, ஏஐடியுசி மாநிலக் குழு உறுப்பினா் ஏ.ஜி. ராஜா தலைமை வகித்தாா். அப்போது, கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 7,500 வழங்கவேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதுடன், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிந்தவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
இதில், ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன், கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சிவசாமி, போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் மணவழகன், மாநிலக் குழு உறுப்பினா் கண்ணன், நகரத்தலைவா் கணேசன், நகர துணைத்தலைவா் செல்வபாண்டி,தூய்மைப்பணியாளா் சங்கத் தலைவா் டி. முருகன், நடைபாதை வியாபாரிகள் சங்க செயலா் ரவிச்சந்திரன், அமைப்புசாரா தொழிலாளா் சங்கச் செயலா் சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க செயலா் மணிவண்ணன், செயலா் பாலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.