மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த மதுரையைச் சோ்ந்த பக்தா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மாசிலாமணி (32). இவா் தனது உறவினா்களுடன் மானாமதுரை அருகே மிளகனூா் கிராமத்தில் உள்ள அழகிநாச்சியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா். அப்போது மதுஅருந்தி இருந்த அவா் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.