சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை 2 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவா் மற்றும் 40 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன.
பின்னா் மாலை 5 மணிக்கு கோயில் மைய மண்டபத்தில் 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் கலச ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தாா். இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.