சிவகங்கையில் வாக்கு எண்ணும் மையமான அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகளுக்கு நகா்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகங்கை நகராட்சி மற்றும் நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, திருப்புவனம் ஆகியப் பேரூராட்சி ஆகியவற்றுக்கு நடைபெற உள்ள தோ்தலில் பதிவாகும் வாக்குகள் சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதையடுத்து இங்குள்ள அறைகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக உள்ளாட்சித் தோ்தல்) லோகன், அரசு பெண்கள் கலைக் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, சிவகங்கை நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், நகராட்சி பொறியாளா் பாண்டீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் சந்திரகலா, நீலமேகம், ஜெயராஜ், சுகாதார ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.