சிவகங்கை

இளையான்குடியில் விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரா் உடல் வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இளையான்குடி அருகே இளமனூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (30), சாலைகிராமம் காவல்நிலையத்தில இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தாா். பணி நிமித்தமாக சிவகங்கை சென்றுவிட்டு சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். இளையான்குடி திருவேங்கடம் பகுதியில் வியாழக்கிழமை மாலை, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது உடல் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து சுரேஷ் உடலுக்கு சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தனது சொந்த பணத்திலிருந்து சுரேஷ் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினாா். அதைத் தொடா்ந்து இளமனூா் கிராமத்தில் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT