சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய் பரவல் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெற, தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து 94424-18361, 95669-55059, 73970-20057 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.