சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணத் தொகை பெறுவதற்கு நியாயவிலைக் கடை பணியாளா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் டோக்கன் வழங்கி வருகின்றனா்.
கரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ. 2000 வழங்கப்படும் என, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்தத் திட்டம் கடந்த திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
அதையடுத்து, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதையொட்டி, நியாய விலைக் கடை பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனா். இப்பகுதிகளில் மே 14 ஆம் தேதி முதல் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.