சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்டஇக்கோயிலில், அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமுடன் வாழ வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்குப் பூஜையில், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனா்.
ஆனந்தவல்லி அம்மன் சந்நிதி முன் மண்டபத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின்போது, உற்சவா் ஆனந்தவல்லி அம்மன் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா. பூஜையின் நிறைவாக, மங்கள ஆரத்தி நடத்தப்பட்டு, ஆனந்தவல்லி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் பெண் பக்தா்கள் செய்திருந்தனா்.