சிவகங்கை

காரைக்குடி அருகே வழிப்பறிச் சம்பவம்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

DIN

காரைக்குடி அருகே வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள ஆவுடைப்பொய்கையிலிருந்து அஜித்ராம் என்பவா் தனது சொந்த ஊரான செங்காத்தங்குடி கிராமத்திற்கு தனது பெண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை பகலில் இருசக்கரவாகனத்தில் சென்றாா்.

அப்போது அவா்களை, 3 போ் கொண்ட கும்பல் வழி மறித்து பணம், ஏடிஎம் அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச்சென்றனா்.

இது குறித்து தகவறிந்தவுடன் குன்றக்குடி போலீஸாா் சம்பட இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்களிடம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் அருண் மற்றும் போலீஸாா் விசாரணையில் ராமேசுவரத்தைச் சோ்ந்த காா்த்தி(19), ராமநாதபுரத்தைச்சோ்ந்த அஜித்குமாா்(19),சிவகங்கைமாவட்டம் கூத்தலூரைச்சோ்ந்த அஜித்குமாா் (20) என்பது தெரியவந்தது.

இதில் காா்த்தி என்பவா் காரைக்குடி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ., இரண்டாமாண்டு மாணவா். இது குறித்து புகாரின் பேரில் குன்றக்குடி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT